பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, August 26, 2014

நெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.


8

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்தில் இந்தக் கொற்கைதான் தமிழகத்தின் மிக முக்கிய துறைமுகமாக விளங்கியுள்ளது. என்ன வியப்பாக இருக்கிறதா! ஆம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாண்டியர்கள் ஆட்சி காலத்தில் கொற்கையில் இருந்து கடல் வழி வாணிபம் மிகவும் சிறப்பாக நடந்து இருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் இன்றும் உள்ளது. பாண்டிய மன்னன் பொற்கை பாண்டியனின் நினைவாக இவ்வூருக்கு பொற்கை என்றே பெயர் இருந்தது. அது காலப் போக்கில் கொற்கை என்று மருவியதாக கூறப்படுகிறது.




கொற்கை


இப்போது இருக்கும் கொற்கை கிராமம் வரை முன்பு கடல் இருந்து இருக்கிறது. பின்னர் இயற்கை மாறுபட்டால் கடல் சுமார் 3 கி.மீ பின்னோக்கி சென்றுவிட்டது. இன்றும் இந்த ஊரில் 10 அடி தோண்டினால் கடல் சங்குகள் கிடைப்பதாக இவ்வூர் மக்கள் கூறுகிறார்கள். இங்கு பசுமை வாய்ந்த மரங்களுடன் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தின் நடுவே பழமை வாய்நத கண்ணகி கோவில் உள்ளது. இந்த கோவிலை பாண்டிய மன்னன் செழியனின் தம்பி வெற்றிவேல் செழியன் கட்டியதாக கூறப்படுகிறது. இந்த கோவிலின் உள் பகுதி கருங்கல்லால் கட்டப்பட்டு உள்ளது. அவற்றில் மீன் சின்னங்களும் பொறிக்கப்பட்டு உள்ளன.

அந்த காலத்தில் போருக்கு செல்லும் மன்னர்கள் இந்த கோவிலுக்கு சென்று வணங்கி விட்டுதான் செல்வார்களாம். நாளடைவில் இக்கோவிலும் வெற்றிவேல் அம்மன் கோவில் என்று அழைக்கப்படலாயிற்று. இங்குள்ள குளத்துக்கு எதிரே வாழைத்தோட்டத்தின் நடுவில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஈஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இந்த கோவிலைச்ss சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.

இந்த ஊரின் நடுவே சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த வன்னி மரம் ஒன்று உள்ளது. இந்த வன்னி மரத்தை இந்த கிராம மக்கள் இன்றும் தெய்வமாக வழிபடுகின்றார்கள். சில ஆண்டுகளுக்கு முன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இங்கு ஆய்வு செய்தபோது பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய பானை தாழிகள் சங்குகள் ஆகியன கிடைத்தன. அவை தற்போது நெல்லையில் உள்ள அருட்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இத்தகைய பெருமை வாய்ந்த கொற்கை கிராமத்துக்கு தூத்துக்குடியில் இருந்து பழைய காயல் வழியாகவும் நெல்லையில் இருந்து ஏரல் வழியாகவும் வரலாம்.


கலைப் பொக்கிஷம்  கிருஷ்ணாபுரம் 


நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்து உள்ளது கிருஷ்ணாபுரம் கோவில். நெல்லையில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள கற்சிலைகள் நாயக்கர் கால சிற்ப கலையை இன்றும் பறைசாற்றுகின்றன. ஒவ்வொரு சிலையும் உயிரோட்டமிக்கவையாகும். இங்குள்ள சிற்பங்கள் உலக பிரசித்தி பெற்றவை. காண்போரை கவர்ந்து இழுக்கக் கூடியவை. தமிழகத்தின் கலை பொக்கிஷங்களில் இது தலைசிறந்த இடத்தில் உள்ளது என்று சொன்னால் மிகையல்ல.


காண வேண்டிய முக்கியத் தலங்கள் 


தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மலையில் அரிய வகை அனமான வெளிமான் அதிகமாக காணப்படுகிறது. இந்த மலையில் உள்ள சீதோஷன நிலையும் ஏராளமான மரங்களும் வெளிமான்கள் வாழ்வதற்கேற்ற சூழ்நிலையில் உள்ளதால் அவற்றுக்கு இங்கு வனத்துறை சார்பில் சரணாலயம் அமைக்கப்பட்டு உள்ளது. நெல்லையில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் வல்லநாடு உள்ளது. மேலும் இங்கு தமிழ்நாடு காவல் துறையின் சார்பில் துப்பாக்கிச் சுடுதளம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள தலைசிறந்த துப்பாக்கி சுடுதளத்தில் இதுவும் ஒன்று. மாவட்டத்தில் கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, அவர் தூக்கிலிடப்பட்ட கயத்தாறு, வேம்பார், குளத்தூர் கடற்கரை தூத்துக்குடியில் உள்ள ரோச் பூங்கா மற்றும் தூத்துக்குடி அருகே உள்ள சின்னச்சின்னத் தீவுகள், கழுகுமலை ஆகியவை சிறந்த சுற்றுலாத் தலங்கள் ஆகும். கழுகுமலையில் உள்ள குடைவரை கோவில் மற்றும் சமணர் கால சிற்பங்களை காண வெளிநாட்டில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.


பாஞ்சாலங்குறிச்சி

1

வெள்ளையர்களை எதிர்த்து வீரமுழக்கமிட்டு சுதந்திரத்துக்காக தூக்கு மேடையில் உயிர் துறந்த மாவீரன் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மன். இவரது வீரத்தையும் தியாகத்தயும் போற்றும் வகையில் பாஞ்சாலங்குறிச்சியில் அவர் கட்டியிருந்த கோட்டை போன்று புதிதாக தமிழக அரசு ஒரு நினைவுகோட்டையை 1974-ம் ஆண்டு கட்டியது. இங்கு கட்டபொம்மன் வழிபட்ட வீரசக்கம்மாதேவி கோவில்  உள்ளது. இந்த கோட்டை சிறந்த சுற்றுலா தலமாகும். இந்த கோட்டை தினமும் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் திறந்து இருக்கும். அதற்கான நுழைவு கட்டணம் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கலிடப்பட்ட கயத்தாறிலும் அவருக்கு நினைவிடம் உள்ளது. பாளையங்கோட்டையிலும் நினைவிடம் உள்ளது. அவர் வழிபட்ட சுவாமி சிலைகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

எட்டயபுரம்

7


பாட்டுக்கொரு புலவன் சுப்பிரமணிய பாரதிக்கு அவர் பிறந்த எட்டயபுரத்தில் கல்கி கிருஷ்ண மூர்த்தியால் நினைவு இல்லம் கட்டப்பட்டு 1945 - ம் ஆண்டு திறக்கப்பட்டது. 1981-ம் ஆண்டு பாரதியாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. மேலும் இங்கு உமறுபுலவருக்கும் நினைவு மணி மண்டபம் உள்ளது.


வ.உ.சி. மணிமண்டபம்

9


சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வண்டானம் எனும் கிராமத்தில் பிறந்தார். அவரது நினைவாக ஓட்டப்பிடாரத்தில் அவர் வாழ்ந்த வீட்டை 12-12-1961 அன்று தமிழக அரசு நினைவில்லமாக அறிவித்தது. அங்கு அவரது சிலையும் புகைப்பட கண்காட்சியும் அமைந்துள்ளது. மேலும் நெல்லை மாநகராட்சி எதிரே வ.உ.சி. நினைவாக மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது.


இருபெரும் தளபதிகள்


வீரபாண்டிய கட்டபொம்மனின் இருபெரும் தளபதிகளில் ஒருவரான வெள்ளையத்தேவனுக்கு வல்லநாடு கிராமத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் அவரது இன்னொரு தளபதியான வீரன் சுந்தரலிங்கத்துக்கு ஓட்டப்பிடாரத்தை அடுத்த கவர்னகிரியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது.


வாஞ்சிமணியாச்சி

2


சுதந்திர போராட்ட மாவீரர் வாஞ்சிநாதன் நினைவாக மணியாச்சி ரெயில் நிலையம் அவரது பெயருடன் சேர்த்து வாஞ்சிமணியாச்சி என்று அழைக்கப்படுகிறது. மேலும் அவர் பிறந்த செங்கோட்டையில் அவரது முழு உருவ சிலை அமைக்கப்பட்டு உள்ளது.


நெற்கட்டும் செவல்

இந்திய திருநாடு ஆங்கிலேயர் ஆட்சியில் சிக்குண்டு இருந்தபோது வெள்ளையர்களுக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவர் நெற்கட்டும் செவலை ஆண்ட மாமன்னர் பூலித்தேவர். 1715-ம் ஆண்டு பிறந்த இவர் ஆங்கில அரசுக்கு வரிகட்ட மறுத்து வெள்ளையர்களை எதிர்த்தார். இதனால் ஏற்பட்ட போரில் வெள்ளையர்களால் சுற்றி வளைக்கப்பட்டபோது சங்கரன்கோவில் சங்கநாராயண சுவாமி கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வருவதாக சென்றவர் அங்கிருந்த மர்ம அறையில் இருந்து மாயமாக மறைந்தார் என்று கூறப்படுகிறது. இவரது நினைவை போற்றும் வகையில் சிவகிரி தாலுகா நெற்கட்டும் செவலில் அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது.

ஏழைகளின் ஊட்டி “குற்றாலம்“

6


நெல்லை மாவட்டம் பரந்து விாிந்த நிலப்பரப்பை உடையது. இங்கு இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலங்கள் பல உள்ளன. அவற்றில் முதன்மையானது குற்றாலம். உலகில் பல இடங்களில் அருவிகள் இருந்தாலும் குற்றாலம் அருவிகளில் இருக்கும் மகத்துவம் வேறு இடங்களில் இல்லை. மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மூலிகைகளின் குணத்தை தாங்கி வரும் குற்றால அருவிகளில் குளித்தால் உடலுக்கும் மட்டுமல்ல மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்டும் குற்றாலத்தில் மெயின்அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி ,செண்பகாதேவி அருவி, தேனருவி, பழைய குற்றால அருவி, புது அருவி ஆகிய அருவிகள் உள்ளன. முக்கிய பிரமுகர்களுக்காக பழந்தோட்ட அருவி உள்ளது. இவை தவிர தமிழக-கேரள எல்லை பகுதிகளில் பல அருவிகள் உள்ளன.


குற்றாலம் பஸ் நிலையத்தில் இருந்து மேற்கு பகுதியில் சிறிது தூரம் நடந்தால் மெயின் அருவி உள்ளது. அருவிக்கரை அருகே குற்றாலநாதர் கோவில் உள்ளது. மெயின் அருவியில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் பழைய குற்றால அருவி உள்ளது. இங்கிருந்து குற்றாலத்துக்கு வரும் வழியில் இடது புறம் 6 கி.மீ. தொலைவில் புலியருவி செல்லும் பாதை உள்ளது. அங்கிருந்து 1 கி.மீ சென்றால் புலியருவியை அடையலாம். மெயின் அருவியில் இருந்து ஐந்தருவி செல்லும் ரோட்டின் தொடக்கத்திலேயே இடதுபுறம் சிறிது தூரத்தில் சிற்றருவி உள்ளது. சிற்றருவியில் இருந்து மலையில் 5 கி.மீ நடந்து சென்றால் செண்பகாதேவி வரும். இங்கு செண்பகா தேவி அம்மன் கோவிலும் உள்ளது. செண்பகாதேவி அருவிக்கு மேல் மலையில் 3 கி.மீ தொலைவில் தேனருவி உள்ளது. இதில் குளிக்க முடியாது. இங்கு செல்வது மிகவும் ஆபத்தானது. அருவி விழும் பகுதிக்கு சுமார் 1/2 கி.மீ நீந்திதான் செல்ல முடியும். குற்றாலம் மெயின் அருவியில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் ஐந்தருவி உள்ளது. இதன் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டுவதை பார்ப்பதற்கே அழகாக இருக்கும். ஐந்தருவி பஸ் நிலையத்துக்கு செல்லும் முன்பு இடது புறம் செல்லும் பாதையில் 2 கி.மீ தொலைவில் பழந்தோட்ட அருவி உள்ளது. ஜீன் மாதம் தொடங்கி தொடங்கி ஆகஸ்டு மாதம் வரையில் குற்றால சீசன் இருக்கும்.


குற்றாலத்துக்கு வரும் பயணிகளின் வசதிக்காக சுற்றுலாத்துறை பல்வேறு வசதிகளை செய்து உள்ளது. சுற்றுலா பயணிகளின் பொழுது போக்கிற்காக குற்றாலத்தில் 2 பூங்காக்கள் உள்ளன. இங்கு புகழ்பெற்ற குற்றாலநாதர் கோவில் உள்ளது.  குற்றாலம் வரும் பயணிகளை பொிதும் கவர்ந்து இழுப்பது சீசன் காலங்களில் இங்கு கிடைக்கும் அரிய வகை பழங்களான மங்குஸ்தான் துரியன் நட்சத்திர பழம் உள்ளிட்ட பழ வகைகள். குற்றாலத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது கும்பாருட்டி அருவி.


இயற்கை எழில் சூழ்ந்த அருவிகள்

3


நெல்லை மாவட்டத்தில் குற்றாலத்துக்கு அடுத்தபடியாக சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்வது பாபநாசம் அகஸ்தியர் அருவிக்குதான். அம்பாசமுத்திரத்தில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் அகஸ்தியர் அருவி உள்ளது. இந்த அருவியில் ஆண்டுதோறும் தண்ணீர் கொட்டுவதால் இங்கு எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். பாபநாசத்தில் பாபநாச சுவாமி கோவில் அகஸ்தியர் அருவி கல்யாணி தீர்த்த அருவி காரையாறு அணை பாணதீர்த்த அருவி ஆகியவை பார்க்கக்கூடிய முக்கிய இடங்கள். இதுதவிர அகஸ்திய முனிவர் வாழ்ந்ததாகக் கூறப்படும் பொதிகை மலைக்கும் தற்போது பக்தர்கள் கால்நடையாக சென்று வருகிறார்கள். பாபநாசம் மலையில் உள்ள சொரிமுத்தையனார் கோவில் மிகவும் புகழ்பெற்றது. ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் இங்கு லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.


இதையடுத்து மணிமுத்தாறு சிறந்த சுற்றுலா தலமாக அமைந்துள்ளது. இங்குள்ள அணை மற்றும் அதையொட்டி அமைக்கப்பட்டு உள்ள பூங்காவுக்கும் சுற்றுலா பயணிகள் செல்வார்கள். நெல்லையில் இருந்து 47 கி.மீ. தொலைவிலும் கல்லிடைக்குறிச்சியில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலும் மணிமுத்தாறு அமைந்துள்ளது. இங்குள்ள அருவியில் குளிக்கலாம். நெல்லை மாவட்டத்தில் மாஞ்சோலை பார்க்க வேண்டிய இடம் சிறந்த மலைவாழ் தலமான இங்கு தேயிலை எஸ்டேட்கள் நிறைந்து உள்ளன. இயற்கை எழில் சூழ்ந்த ரம்மியமான பகுதி இது. இங்கு செல்ல வனத்துறை அனுமதி வேண்டும்.


உலகம் வெப்பமயமாதலைத் தடுப்போம் (ஆபத்தை ஏற்படுத்தும் உலக வெப்பமயமாதல்)

பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்னாள் சூரியனில் இருந்து வெடித்து சிதறிய ஒரு சிறிய நெருப்பு கோள்தான் தற்போது நாம் வசிக்கும் பூமி. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குளிர்ந்த இந்த நெருப்பு கோளில்  இயற்கையின் மாற்றங்களால் சிறிய அணுக்கள் தோன்றின. பூமியில் இயற்கையாக உள்ள நீர் மற்றும் காற்று காரணமாக சிறிய அணுக்கள் பரிணாம வளர்ச்சி பெற்று இன்று இந்த பூமி தட்டின் மேற்பரப்பில் மனிதன் உள்பட எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. மனித குலம் தமது வசதிக்காக செய்யும் ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் பூமியின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது.
தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பூமிக்கு மேற்பரப்பில் உள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். இதுவும் உலகம் வெப்பமயமாதலுக்கு ஒரு காரணமாகும். பூமி வெப்பம் அடைதல் காரணமாக அண்டார்டிக்கா கண்டத்தில் உள்ள பனி மலைகள் உருகும் அதன் மூலம் கடல் மட்டயம் உயரும் அபாயம் ஏற்படலாம் என்றும் விஞ்ஞானிகள் அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளனர். தற்போது இந்த உலகில் மிக முக்கிய பிரச்சினையாக உலக வெப்பமயமாதல் இருந்து வருகிறது. இதனை என்னென்ன வகையில் கட்டுப்படுத்தலாம் என்பதைக் காணலாம்.


பொருட்களைக் குறைவாக பயன்படுத்துதல், மறு பயன்பாடு மற்றும் மறு சுழற்சி செய்தல் ஆகியவற்றுடன் அளவுக்கு அதிகமாக தேவையற்ற மின்சாதனப் பொருட்களை வாங்கி குவிப்பதைத் தடுக்க வேண்டும். வீடுகளில் தேவையில்லாத நேரங்களில் இயங்கும் மின விசிறி, மின் விளக்குகள், டி.வி. ஆகியவற்றை நிறுத்த வேண்டும். மின் சாதனங்கள் இயங்காத நிலையில் இருக்கும்போது பிளக் போர்டுகளில் உள்ள அவற்றின் சுவிட்சுகளை ”ஆப்” செய்துவிட வேண்டும். அதிகம் மின்சாரம் செலவில்லாத நவீன மின்விளக்குகளை பயன்படுத்தலாம். வாகனங்களில் இருந்து வெளியேறும் கரியமில வாயுக்களாலும் உலகம் வெப்பமடைகிறது. எனவே குறைந்த தூர பயணங்களுக்கு சைக்கிள்களை பயன்படுத்தலாம். தொலைதூர பயணங்களுக்கு தனிப்பட்ட முறையில் கார்களை பயன்படுத்துவதை தவிர்த்து பஸ் ரெயில்களில் பயணம் செய்யலாம். தண்ணீருக்காக அடிக்கடி மோட்டார்களை போடுவதை குறைக்க வேண்டும். இதற்கு தண்ணீரைச் சிக்கனமாக உபயோகிக்க பழகிக்கொள்ள வேண்டும். குளர்சாதனப் பெட்டிகளைத் தேவையில்லாமல் பயன்படுத்தக் கூடாது. இது போன்றவைகளைக் கடைப்பிடித்தாலே உலகம் வெப்பமயமாதலை  கட்டுப்படுத்த முடியும்.

அய்யனார் சுனை 

5


திருச்செந்தூர் திருநெல்வேலி சாலையில் சுமார் 10வது கி.பி இல் நெடுஞ்சாலையிலிருந்து இடதுபுறம் கிளைசாலை மேலப்புதுக்குடி சுனைக்கு இடடுச்செல்லும். இயற்கை எழிலுடன் தாழை மரங்கள் மலர்ந்து தாழம்பூ மணம் கமழ அருள்மிகு அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோயில் அற்புதக் காட்சி தருகிறது. எத்தகைய கோடையானாலும் வற்றாத சுனையின் இயல்பு குன்றாப் பொலிவுடன் உள்ளது.


ஆதிச்சநல்லூர் 


கி.மு.1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் எச்சங்கள் பயன்படு பொருட்களைக் கொண்ட முதுமக்கள் தாழிகள் ஏராளமானவற்றைத் தன்னுள் கொண்டுள்ள ”ஆதிச்சநல்லூர்பறம்பு” திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ளது. ”தாழிக்காடு” என்று தொல்லியல் அறிஞர்களால் பெரிதும் போற்றப்படுகிறது. 3'6" அடியிலிருந்து 3'9" அடி வரை வாய் அகலமுள்ள பல்வேறு முதுமக்கள் தாழிகள் அவற்றுள் விதவிதமான கருப்பு சிவப்பு மண்பாண்டங்கள் இரும்பு ஆயுதங்களான குறுவாள், வெட்டுக்கத்தி, கட்டாரிகள், மண்டையோடுகள், எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பொருட்கள் பாளையங்கோட்டையில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே உள்ள ”அருங்காட்சியகத்தில்” காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளன.


காயல்பட்டினம்


ஆறுமுகநேரிக்குக் கிழக்கே உள்ள ஊர் காயல்பட்டினமாகும் கி.மு. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழர் நாகரீகத்திற்குச் சான்றாக முதுமக்கள் தாழிகள் கருப்பு சிவப்பு பானை ஓடுகளும் மிகச்சிறந்த துறைமுகப்பட்டினமாகவும் அரபு நாட்டின் முகமதியர்கள் இங்கு குடியேறியதற்குச் சான்றாக அரபு நாட்டு பானை ஓடுகளும் விரவிக்கிடக்கின்றன. கல்லறை நடுகற்களான மீசான் கற்பலகைகள் ஏராளமாக உள்ளன. பாண்டிய மன்னர்களின் மத நல்லிணக்கத்திற்குச் சான்றான கல்வெட்டுகளும் உள்ளன. இவ்வூரின் முற்கால பெயர் சோநகர்பட்டினம் பவித்திரமாணிக்கப் பட்டினமாகும். ஆறுமுகநேரி வழியாக தாமிரபரணியின் கிளை ஆறு ஒன்று காயல்பட்டினம் ஊர் வழியே கடலில் சென்று கலந்தது என்று தாலமி கூறுகிறார். இவ்வூாில் 1000 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல்கள் பல உள்ளன.

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment