பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, September 7, 2014

சீசன் டிக்கெட் சிக்கல்கள்! - சே. கவிதா, அரக்கோணம்.


பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, காகிதம் உபயோகத்தை கட்டுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
வங்கிகளில் ஏ.டி.எம். மையங்கள் மூலம் நேரம் மிச்சப்படுவதோடு பேப்பர் உபயோகமும் மிச்சப்படுகிறது. சில வங்கிகளில் ஈ-கார்னர் என்ற மின்னணு தானியங்கி பணம் செலுத்தும் முறையும் தற்போது செயல்படத் தொடங்கி இருக்கிறது.
இப்படி இருக்கையில் ரயில்வே நிர்வாகம் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ரயிலில் மாதாந்திர, காலாண்டு, ஆண்டு பயணச்சீட்டு உபயோகிப்பவர்கள், அவர்களுடைய இருப்பிடச்சான்று, புகைப்படச் சான்று அடையாளச் சான்று நகல்களுடன், மாதாந்திர பயணச்சீட்டு விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று. இந்த முறையும் ரயில் நிலையத்திற்கு ரயில் நிலையம் மாறுபடுகிறது.
பயணிகள் "இது ஒரு முறை மட்டும்தானே' என்று கேட்டதற்கு, "இந்த மாதத்திற்கு இது பொருந்தும், அடுத்த மாதத்திற்கு என்ன என்பது எங்களுக்கே தெரியாது' என்று பதிலளிக்கிறார்கள் ரயில்வே ஊழியர்கள். கடந்த சில தினங்களாக ரயில் நிலையங்களில், ஒவ்வொரு மாதமும் இனி மாதாந்திர பயணச்சீட்டு பெற அதற்குரிய விண்ணப்பப் படிவத்துடன் இருப்பிடச்சான்று, புகைப்பட சான்று அடையாளச் சான்று நகல் இணைக்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டியவை, விண்ணப்பப் படிவத்தில் இருக்கும் வரிகள். "நான் சமூக விரோத, சட்ட விரோத செயல்களிலோ அல்லது இந்திய ரயில்வே சட்டத்துக்கோ எதிராகவோ ஏதேனும் செயல்களில் ஈடுபட்டாதாக கண்டுபிடிக்கப்பட்டால், எனக்கு வழங்கப்படும் மாதாந்திர பயணச்சீட்டை ரத்து செய்யலாம். புதிதாக வழங்கவும் வேண்டாம் என தெரிவித்துக்கொள்கிறேன்' என அச்சிடப்பட்டு பயணிகளிடம் கையெழுத்து வாங்கப்படுவதுதான்.
நன்றி : கருத்துக்களம், தினமணீ

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment