பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Wednesday, October 15, 2014

கம்பர் ஆரம்பித்து ஒளவையார் முடித்து வைத்த பாடல் !

அம்பர் என்றொரு கிராமம். அங்கு வாழ்ந்து வந்தாள் சிலம்பி என்றொருத்தி. அவளிடம் 500  பொன்பெற்றுக்  கம்பர்  இருவரிகளை  மட்டும்  பாடிச்சென்றார்.
 
தண்ணீரும்  காவிரியே  தார்வேந்தன்  சோழனே
மண்ணாவதுஞ்  சோழ  மண்டலமே  - என்று பாடிவிட்டுச் சென்று விட்டார்.
 
 
பின்னர்  அங்கு வருகை புரிந்த ஒளவையார் மீதி இரு  வரிகளைப்  பாடி பாடலை  முடித்து  வைத்தார்.
 
---பெண்ணானவள்
அம்பொற் சிலம்பி  யரவிந்தத்  தாளணியுஞ்
செம்பொற்  சிலம்பே  சிலம்பு.
 
முழுப்பாடல் :- 

தண்ணீரும்  காவிரியே  தார்வேந்தன்  சோழனே
மண்ணாவ  துஞ்சோழ  மண்டலமே  -  பெண்ணாவாள்
 அம்பொற் சிலம்பி  யரவிந்தத்  தாளணியுஞ்
செம்பொற்  சிலம்பே  சிலம்பு.
 
பொருள் :-

வற்றாதது காவிரி  ஆறு. சோழமன்னனே  மன்னருள்  சிறந்தோன்.  சோழநாடே நிலவளம் மிகுந்தது. அம்பர் என்னும்  கிராமத்தில்  வாழும் சிலம்பியே பெண் என்று சொல்லத்தக்கவள் ஆவாள்.

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment