அம்பர் என்றொரு கிராமம். அங்கு வாழ்ந்து வந்தாள் சிலம்பி என்றொருத்தி. அவளிடம் 500 பொன்பெற்றுக் கம்பர் இருவரிகளை மட்டும் பாடிச்சென்றார்.
தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவதுஞ் சோழ மண்டலமே - என்று பாடிவிட்டுச் சென்று விட்டார்.
பின்னர் அங்கு வருகை புரிந்த ஒளவையார் மீதி இரு வரிகளைப் பாடி பாடலை முடித்து வைத்தார்.
---பெண்ணானவள்
அம்பொற் சிலம்பி யரவிந்தத் தாளணியுஞ்
செம்பொற் சிலம்பே சிலம்பு.
முழுப்பாடல் :-
தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பொற் சிலம்பி யரவிந்தத் தாளணியுஞ்
செம்பொற் சிலம்பே சிலம்பு.
பொருள் :-
வற்றாதது காவிரி ஆறு. சோழமன்னனே மன்னருள் சிறந்தோன். சோழநாடே நிலவளம் மிகுந்தது. அம்பர் என்னும் கிராமத்தில் வாழும் சிலம்பியே பெண் என்று சொல்லத்தக்கவள் ஆவாள்.
0 comments:
Post a Comment