பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, October 9, 2014

தமிழா ! இனத்தை மறந்திடாதே ! - என்றும் தமிழாய் வாழும் பெருஞ்சித்திரனார்.


எந்தக்  கட்சியில்  நீ  இருந்தாலும்
இனத்தை  மறந்திடாதே !  -  தமிழா !
இனத்தை  மறந்திடாதே !   -  உன்
சொந்தக்  குடும்பம்  தனைப்பல  கருத்தால்
சுட்டுப்  பொசுக்கிடாதே  !  -  தமிழா
சுட்டுப்  பொசுக்கி  டாதே  !

எந்தத்  திசையில்  நீ  இருந்தாலும்
ஏற்றந்  துறந்திடாதே !  -  தமிழின்
எழிலைத்  துறந்திடாதே  !  -  பழங்
கந்தலை  யுடுத்துக்  கஞ்சியை  யருந்தினும்
கனிவை  யிழந்திடாதே  !  -  இனக்
கனிவை  யழித்தி  டாதே  !

எந்த  நிலத்தினில்  நீ  இருந்தாலும்
இயல்பை  மாற்றிடாதே !  -  இனத்தின்
இணைப்பை  யறுத்திடாதே  !  -  உன்
முந்தையர்  வாழ்ந்த  முதுதமிழ்  நாட்டின்
மொழியை  மறந்திடாதே  !  -  உணர்வை
மூளி  யாக்கிடாதே  !

எந்தப்  படையினில்  நீ  இருந்தாலும்
இனத்தை  எதிர்த்திடாதே  !  -  தமிழா,
எதிரிக்  குழைத்திடாதே  !  -  உன்
சொந்தத்  தமையனைத்  தம்பியைக்  கொல்லவே
சூழ்ச்சி  நினைந்திடாதே  !  -  பகைவன்
சோற்றில்  நனைந்திடாதே  !


என்றும் தமிழாய்  வாழும்,

பாவலரேறு  பெருஞ்சித்திரனார்

கனிச்சாறு  -  தொகுதி  2.

தென்மொழி  பதிப்பகம்

மேடவாக்கம்,  சென்னை  -  600 100
-----------------------------------------------------
94444  40449

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment